Friday, December 14, 2007

ஏன் எழுதுகிறேன்?

ஏதோ அல்லது எல்லா பண்டிகைகளிலும்,ஏதோ அல்லது எல்லா தமிழ் தொலைக்காட்சிகளிலும்,ஏதோ அல்லது எல்லா நிருபர்களும்(??), ஏதோ அல்லது எல்லா நடிகைகளை பார்த்து 'நீங்க நடிக்க வந்தது எப்படி?' என்றொரு உலகமகா கேள்வியை கேட்பார்.

அந்த கேள்விக்கான விடைக்கும் இந்த பதிவிற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது..ஆனால்...அந்த கேள்விக்கும் இந்த பதிவிற்கும் தொடர்பு உண்டு.எப்படி என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!!(எப்படி வாசகர்களை(!!!) கட்டி போடறேன் பாருங்க? :-))

சரி மேட்டருக்கு வருவோம் சாரே!!! இதே மாதிரி என்னை பார்த்து யாராவது நீங்க பதிவு போட வந்தது எப்படி?;-னு கேட்டா( இப்ப உன்னை யாருடா கேட்டா?),நான் என்ன பதில் சொல்லுவேன்?

அதாகப்பட்டது நான் எல்கேஜீ-ல படிக்கும் போதே,மத்த பொடியன்கள் 'அணில்,ஆடு, இலை' எழுதுவாங்க!!.ஆனா நான் அப்பவே அணில்,அட்டுகுட்டி,இலை சங்கதிகளை சும்மா அசால்டா பலகைல வரைஞ்சு TEACHER வயித்துல பயங்கரமா புளிய கரைபேன்..அப்புறம் அந்த 'திறமை' (???) அப்படியே DEVELOP ஆயி ஸ்கூல்,காலேஜ் போகும்போது பாக்குற பொண்ணுகளை பத்தியெல்லாம் கவிதை/கவிதை எழுதி கரைபுரண்டோடியது.(பல போர்களையும்,விழுபுண்களும் இந்த 'திறமையால்' பெற்ற மாவீரன் நான்!!!!).SO இத்தனை BACKGROUND உள்ள நான் பதிவு எழுதினலென்ன?.

என்ன மக்கா மண்டை காயுதா?..சரி சரி! விளையாட்டை இதோட நிறுத்திட்டு மேட்டருக்கு வருவோம்.

ஆ! மணி என்ன ஆச்சு சாரே? என்ன ஆறு மணி ஆச்சா? ஐயோ! வுட்டுக்கு ஓடிடனும், இல்லாட்டா இந்த PM புடிச்சி வேலை கொடுத்துருவார்.

அப்ப அந்த MILLION DOLLAR கேள்விக்கு பதில் இதுதானா?...நிச்சயம் இல்லை..அதுக்கான SERIOUS மற்றும் உண்மையான பதிலை அடுத்த பதிவில் சொல்கிறேன்!!

உடு ஜூட் !!!!!

No comments: