Wednesday, February 13, 2008

நிஜமாதான் சொல்றேன்!

பொதுவா வாழ்கையில் நாம சந்தோசமா இருக்கிற நேரங்கள்,நம்மை அறியாமலே வேகமா கடந்து போய்டும்."

பயங்கரமா வேலை செஞ்சி உடம்பு ஓடாய்(!!) தேஞ்சு போனதால, போன வாரம் ஒரு ரெண்டு நாள் விடுப்பில் இருந்தேன்.அப்போ பார்த்த படம் தான் 'கற்றது தமிழ்'.பொதுவாய் இந்த படம் சொல்ல வந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தாலும், ஒரு தமிழ் படித்த மனிதனின் வாழ்க்கை சீரழிவை,இந்த படம் நன்றாகவே சொல்லியிருக்கிறது.

இந்த படம் எனக்கு பிடித்திருப்பதாக பசங்க கிட்ட தெரியாத்தனமா சொல்லி வேற தொலைச்சுட்டேன்!!!,அதுக்கப்புறம் நான் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது!!!.சும்மா tea குடிக்க போகலாமுன்னு கூப்பிட்டா கூட 'நெஜமா தான் சொல்றியா?' -ன்னு ஒரே இம்சைய கூட்டிடானுங்க!!! .

ஆனா நிஜமாகவே படத்தில் இந்த வசனம் பேசப்படும் காட்சிகள் மிக அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.(நீங்களும் 'நிஜமா தான் சொல்றியா?"-ன்னு கேட்டுடாதிங்க!!)

அதே மாதிரி மேலே முதல் வரிகளில் காணப்படும் வசனமும் இதே படத்தில் வருவது தான்.நான் இந்த பதிவை எழுத தூண்டியதும் அவை தான்.

அப்படியே ஒரு நிமிஷம் மல்லாக்க படுத்து யோசிச்சி பாத்தாக்கா உங்களுக்கே இந்த வரிகளின் உண்மை புரியும்.நான் அதேமாதிரி மல்லாக்க படுத்து யோசிச்சி பாத்து எழுதியது தான் பின்வரும் பத்திகள்.

நான் ஸ்கூல் படிக்கும்போது, காலேஜ் படிக்கிற அண்ணன்களை பாத்து அவங்கள மாதிரி நானும் காலேஜ் போயி கலக்கணும்-ன்னு நெனச்சேன்.'உதயம்' படத்தில,(அதாங்க! நம்ப நாகார்ஜுன் ஒரு கையில வளையல் போட்டுக்கிட்டு நடிச்ச படம்) " BOTANY கிளாசும் உண்டு! மேட்னி ஷோவும் உண்டு!" பாட்டுல வரமாதிரி, காலேஜ்ல எல்லாரும் ஆடிகிட்டு இருப்பாங்கன்னு எனக்கு ஒரு நெனப்பு.ஆனா காலேஜ் போனதும் Lecturers முதல் lab assitants வரை பண்ண torture தாங்கமுடியாமல், எப்படா வேலைக்கு போவோம்னு ஆயிபோச்சு.அப்புறம் ஒருவழியா வேலைக்கு சேர்ந்து, இப்போது குப்பையும் கொட்டிக்கொண்டிருக்கிறேன்!(அப்படி என்ன குப்ப கொட்டுற வேலை?.அட! கழுத கெட்டா குட்டிசுவரு!.கரெக்ட்!! SOFTWARE தான்!).ஆனா இப்போ நினைச்சு பாத்தாக்கா, School-லே நான் மிக மிக சந்தோசமா இருந்த நேரங்கள் நிறைய இருந்திச்சு, College-லும் நிறைய சந்தோஷங்கள் இருந்தது.ஆனா அதை அந்த சமயத்தில் உணராமல் இருந்திருக்கிறேன் அல்லது அந்த சந்தோசமான தருணங்கள் நான் அறியாமல் வேகமாக கடந்து போயிருக்கிறது.

அப்பாடா!! இனிமே போடப்போற பதிவுக்கு ஒரு வழியா Buildup கொடுத்தாச்சு!!!

2 comments:

Anonymous said...

அதென்னமோ உண்மை தான்.

சுரேஷ் said...

tamiliall comments adikka ennakku theriyavillai?